Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
குமாரபாளையம் டிச-23 -குமாரபாளையம் அரசு பள்ளிகளில் படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு கட்டமாக புத்தர் வீதி, நகராட்சி தொடக்கப்பள்ளியில், கணினி வசதியுடன் நவீன முறையில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது.
இதில் தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் த.விஜய்கண்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி பாடங்களை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் தி.மு.க செயற்குழு உறுப்பினர் ஓ.ஆர்.செல்வராஜ், கவுன்சிலர் வள்ளியம்மாள், நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.